தக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா?

தக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் பெற நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

  • பி.கே.எம்-1,
  • கே.பி.ஹெச்-1,
  • கோ.பி.ஹெச்-2,
  • யு.எஸ்.-618,
  • ருச்சி,
  • லட்சுமி

ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

உர அளவு:

மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிடுதல் வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து நீர் வழி உரமிடுதல் மூலம் மகசூலை இரட்டிப்பு செய்ய முடியும்.
kodaisirappupathivu
நடவு செய்த 30ஆவது நாளும், நன்றாகப் பூத்திருக்கும் நிலையிலும் 1.25 மில்லி கிராம் என்ற அளவில் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

துல்லிய பண்ணையத்தில் வீரிய ஒட்டு ரகங்களை நடவு செய்தால் ஹெக்டேருக்கு 150 டன்கள் வரை பெற முடியும். நடவு செய்த 9 மாதம் வரை அறுவடை செய்யலாம்.

பச்சைக் காய்ப்புழு, புகையிலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.

தக்காளி

கோடை உழவு:

கோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி பயன்படுத்தியும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். டிரைகோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஹெக்டேருக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் விட வேண்டும். குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட வாளிப்பான நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

பழங்களை அறுவடை செய்த பிறகு அவற்றை தரம் பிரித்து பிளாஸ்டிக் கிரேடுகளில் நிரப்ப வேண்டும். பழங்களின் எடை ஒவ்வொரு ரகத்துக்கு மாறுபடும்.

எனவே, பழங்களை அளவு அடிப்படையில் விற்பனை செய்யக் கூடாது. எடை அடிப்படையில் விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி

ஆமணக்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா பரப்பளவிலும், உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் 3 ஆயிரத்து 750 டன் ஆமணக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் ஆமணக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

ஆமணக்கு

ஆமணக்கு

ஆமணக்கு எண்ணெய் உண்ணா வகையைச் சார்ந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் மேலாக எண்ணெய்ச் சத்து உள்ளது. ஆமணக்கில் இருந்து மருந்துப் பொருள்கள் தயாரிக்கப்

படுகின்றன. இந்த எண்ணெய் பெயின்ட், வார்னிஷ் தயாரிக்கவும் மூலப் பொருள்களாகப் பயன்படுகிறது. மேலும், இதரப் பயிர்களுடன் பொறிப் பயிராக பயிரிடும் போது அந்தப் பயிர்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

பருவம்:

ஆமணக்கு தனிப் பயிராகப் பயிரிட மானாவாரி-ஜூன், ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவை செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்தவையாகும். ஊடு பயிராக எல்லாப் பருவங்களிலும் பயிரிடலாம்.

ரகங்கள்:

  • டெஎம்வி-4 (105 நாள்கள்)
  • டெஎம்வி-5 (120 நாள்கள்)
  • டிஎம்வி-6 (160 நாள்கள்)
  • எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்)
  • ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்)

ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.

நிலத் தன்மை:

டிராக்டர் அல்லது நாட்டுக் கலப்பை மூலம் 2-3 முறை நிலத்தை நன்கு கட்டி இல்லாமல், புழுதிபட உழ வேண்டும். வடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை. கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். தனிப் பயிரானால் நிலத்தை பார்கள் அமைத்து நீர் பாய்ச்ச ஏதுவாக தயார் செய்ய வேண்டும்.

விதை:

சிறந்த தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு ஹெக்டருக்கு தனி பயிரானால் 10 கிலோ விதை தேவைப்படும். கலப்புப் பயிராக அல்லது ஊடு பயிராக இருந்தால் 3 கிலோ விதைகள் போதுமானது. வீரிய ஒட்டு ரகமானால் 5 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி:

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் உயிர்ப் பூசணம் டிரைக்கோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு:

விதைகளை விதைக்கும் முன்பு 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது. விதைகளை பரிந்துரை செய்யப்பட்ட இடை வெளியில் விதைக்க வேண்டும். மானாவாரிப் பயிராக இருந்தால் 90-க்கு 60 செ.மீ. இடைவெளியிலும், இறவையில் பயிரிட்டால் 120-க்கு 90 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.

உரமிடுதல்:

பொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில், பரிந்துரைக்கப்பட்ட அளவான ரகத்திற்கு 30:15:15 கிலோ தழைச்சத்து, மணி சத்து, சாம்பல் சத்து இட வேண்டும். மானாவாரி ஒட்டு ஆமணக்கிற்கு 45:15:15 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும்.

இதில் 30:15:15 அடியுரமாகவும், மீதமுள்ள 15 கிலோ தழைச் சத்தை மேலுரமாக மழை வரும் போது 40-60 நாள்களுக்குள் இட வேண்டும்.

இறவை வீரிய ஒட்டு ஆமணக்கிற்கு 60:30:30 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இட வேண்டும். இதில் 30:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை அடி உரமாகவும், மீதமுள்ள 30 கிலோ தழைச்சத்தை 2 தவணைகளாகப் பிரித்து 30ஆவது நாளும், 60ஆவது நாளும் இட வேண்டும்.

நீர் நிர்வாகம்:

விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நிர்வாகம்:

விதைத்த 3 நாள்களுக்குள் ஏக்கருக்கு புளுகுனோரலின் 800 மி.லி தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம். மருந்து தெளிக்காதபட்சத்தில் விதைத்த 20 மற்றும் 40ஆவது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுóக்க வேண்டும்.

ஊடுபயிர்:

ஆமணக்கை ஊடுபயிராகவும் பயிரிடலாம். ஆறு வரிசை நிலக்கடலை, உளுந்துக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிரிடலாம்.

அறுவடை:

பயிரின் வயதைக் கொண்டு அறுவடை செய்யலாம். குறுகிய கால ரகம் 120-140 நாள்களில் அறுவடை செய்யலாம். நடுத்தர கால ரகம் 150-160 நாள்களில் அறுவடை செய்யலாம்.

– டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ்

 

 

குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம்: மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி

மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண் வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டத்தில் டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.

எள்

எள்

டி.எம்.வி-7, டி.எம்.வி-6, டி.எம்.வி-4, வி.ஆர்.ஐ.எஸ்.வி-1 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-1 ஆகியவை பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களாகும். டி.எம்.வி-7 ரகம் வாடல் நோய் எதிர்ப்பு சக்தி, அதிக மகசூல், பளபளப்பான விதை போன்ற சிறப்புகளை உடையது. எனவே கூடுதல் விலையும், நல்ல லாபமும் கிடைக்கும்.

விதை நேர்த்தி:

ஏக்கருக்கு 2 கிலோ விதையினை 1.5 லிட்டர் நீரில் 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த பாத்திரத்தினை மூடக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை விதையை நன்கு கிளறிவிட வேண்டும். பின்னர் எஞ்சியுள்ள நீரை வடிகட்டிவிட்டு, நிழலில் சாக்குகளை விரித்து விதைகளை உலர்த்தி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறிவிட்டு 15 மணி நேரம் வைக்க வேண்டும்.

இந்த விதையுடன் 8 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் பூஞ்சான உரத்தை கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்.

விதைப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பூஞ்சான விதைநேர்த்தி செய்யப்பட்ட விதையுடன், உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். 2 கிலோ விதைக்கு ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா மற்றும் அரை லிட்டர் ஆறிய அரிசி கஞ்சியில் ஆடையினை நீக்கிவிட்டு இதில் மேற்குறிப்பிட்ட 2 பொட்டலங்களையும் நன்கு கலக்க வேண்டும். இக்கலவையினை விதையுடன் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

நிலம் தயார் செய்தல்:

நிலத்தினை ஏர் கலப்பை கொண்டு 5 முதல் 6 முறை புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அவசியம் இடவேண்டும். மேலும் தேவையான அடியுரம், 80 கிலோ ஜிப்சம் ஆகியவற்றை கடைசி உழவிற்கு முன் இட்டு உழவு செய்யவேண்டும்.

விதைப்பு:

விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணலை கலந்து சீராக குறுக்கும் நெடுக்குமாக விதைக்க வேண்டும்.

விதைத்தபின் படல் கொண்டு இழுத்து விதைகளை மூடவேண்டும். பின்னர் சரிவின் குறுக்கே வாய்க்கால்களும், பாசன வசதிக்கு ஏற்ப பாத்திகளும் அமைக்க வேண்டும். எள் பயிருக்கு உரமிடுதல் மிக அவசியமானது.

உரமிடுதல்:

மண் பரிசோதனைக்கு ஏற்ப தேவையறிந்து உரமிடுவதால் மட்டுமே உரச்செலவை குறைத்து உர விரயத்தை தவிர்த்து, உயர் மகசூல் பெற இயலும். மண் பரிசோதனை மேற்கொள்ள இயலாத நிலையில், பொதுப் பரிந்துரையான ஏக்கருக்கு 30 கிலோ யூரியா, 56 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ், 80 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை இடலாம்.

களை மேலாண்மை:

விதைத்த முதல் 30 நாள்களுக்கு களையின்றி வயலை பராமரிப்பதால் மட்டுமே கால் பங்கு மகசூல் கூடுதலாகப் பெறலாம். விதைத்த 3ஆம் நாள் தண்ணீர் பாய்ச்சியவுடன் மண்ணில் போதிய அளவு ஈரம் இருக்கும் போது ஏக்கருக்கு 1.6 லிட்டர் ஆலாகுளோர் என்னும் களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்து களைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்தலாம்.

விதைத்த 20ஆம் நாள் நீர்ப் பாய்ச்சி மேலுரமிட்டு பயிர் கலைத்தலை மேற்கொள்ளும்பொழுது, இருக்கும் களைகளை எடுத்துவிடவேண்டும்.

நீர்ப் பாசனம்:

பொதுவாக மாலை 5 மணியளவில் செடி வாட்டமாகக் காணப்பட்டால் உடன் நீர்ப்பாசனம் செய்வது அவசியம். மாசிப்பட்ட எள் சாகுபடியைப் பொறுத்தவரை 5 நீர்ப்பாசனங்கள் தேவைப்படும். இவை முறையே, விதைத்த முதல் நாள், 20-25ஆம் நாள், 35-40ஆம் நாள், 50-55ஆம் நாள் மற்றும் 65ஆம் நாள் ஆகும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்:

ஒரு ஏக்கருக்கு 135 மில்லி பிளானோபிக்ஸ் மருந்தினை 12 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய 2 கிலோ டிஏபி கரைசலுடன் 200 லிட்டர் நல்ல தண்ணீர் கலந்து விதைத்த 25, 45 மற்றும் 60ஆம் நாள்களில் கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது குறைந்து காய் பிடிக்கும் தன்மை அதிகமாகும்.

பயிர் பாதுகாப்பு:

எள் பயிரை கொண்டைப்புழு, எள் குடையான், எள் காய் ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி போன்றவை தாக்கி சேதம் விளைவிக்கும். மேலும் வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய் போன்றவையும் எள் பயிரை தாக்கும்.

இறவை எள்பயிரை காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் பார்வையிட்டு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தென்படத் தொடங்கியவுடன் பொருளாதார சேத நிலையினை கணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதைத்த 25, 35 மற்றும் 50ஆம் நாள்களில் ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஒரு நாள் நீரில் ஊறவைத்து வடிகட்டி அத்துடன் 100 கிராம் காதி சோப் கலந்து 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்துவர பூச்சிகள் பயிரை அண்டாது.

பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் உடன் அருகிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மையங்களை தொடர்பு கொண்டு அதற்கான ஒட்டுண்ணியினை இலவசமாகப் பெற்று கட்டுப்படுத்தலாம்.

அறுவடை:

ரகத்தைப் பொறுத்து அறுவடை காலம் வேறுபடும். தண்டு மஞ்சள் நிறமாக மாறுவதும் கீழ்பகுதியிலிருந்து எட்டாவது காய்களில் உள்ள விதைகள் நிறம் மாறத் துவங்குவதும் அறுவடைக்கான அறிகுறிகளாகும். அறுவடை செய்யப்பட்ட செடியின் முன்பகுதி உட்புறமாகவும், அடிப்பகுதி வெளிப்புறமாகவும் உள்ளவாறு வட்ட வடிவமாக செடிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வர வேண்டும். இவ்வாறு அடுக்கும்போது, வேப்பங்கொட்டைத்தூளை தூவி வருவதன் மூலம் பூச்சித் தாக்குதலை தடுக்கலாம். பின்னர், வைக்கோல் கொண்டு மூடவேண்டும்.

போரினை 3 நாள்களுக்குப்பின் பிரித்து செடிகளை உதறி, கிடைக்கும் எள்ளை தனியாக சேகரிக்க வேண்டும். பின்னர், செடிகளை வெயிலில் உலர்த்தி அடுத்த 2 நாள்களுக்கு உலுக்கி கிடைக்கும் எள்ளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். இவ்விதைகளை தனித்தனியாக 7 முதல் 8 சதவீத ஈரப்பதம் வரும்வரை உலர்த்தி தனித்தனியாக சேகரிக்க வேண்டும்.

இந்த தொழில்நுட்ப முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் மாசிப்பட்டத்தில் குறைந்த செலவில் எள் சாகுபடியில் அதிக வருமானம் பெறலாம் என்றனர்.

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

dn

துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை ஆராய்ச்சியாளர் முனைவர் முரு. ராமநாதன், பேராசிரியர் சு. ராஜேந்திரன்

கார்த்திகைப் பட்ட எள் சாகுபடித் தொழில்நுட்பம்

கார்த்திகைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், உயர் விளைச்சல் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் நிலக்கடலைக்கு அடுத்தபடியாக அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக இருப்பது எள் மட்டுமே. இப்போது கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர் – டிசம்பர்) எள் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.

எண்ணெய் வித்துகளின் இளவரசி என்று அழைக்கப்படும் எள் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.

ரகங்கள்:

கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு

  • கோ-1,
  • டிஎம்வி-3,
  • டிஎம்வி-5,
  • எஸ்விபிஆர்-1

ஆகிய ரகங்கள் தகுதியானவை.

எள் பயிரிடுவதற்கு மணல் பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை.

உழவு முறை:

எள் விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், விதைகள் நன்கு முளைக்க மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து, நுண்மைப்படுத்த வேண்டும். எனவே, நிலத்தை இரு முறை டிராக்டர் கலப்பையால் உழவு செய்ய வேண்டும்.

இல்லையெனில், இரும்புக் கலப்பையால் மூன்று முறையோ அல்லது நாட்டுக் கலப்பையால் 5 முறையோ உழவு செய்ய வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இடவேண்டும்.

இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைக் கணக்கிட்டு, 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு நீர் தேங்காத வகையில் நன்கு சமன் செய்யப்பட்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதை நேர்த்தி:

ஓர் ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கான்பன்டாசிம் அல்லது 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விருடி என்ற அளவில் கலந்து, 24 மணி நேரம் காற்றுப் புகாத வகையில் வைத்திருந்து, உயிர் உர விதையை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, ஓர் ஏக்கருக்குத் தேவையான விதையுடன் விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்திய பிறகு விதைப்பு செய்ய வேண்டும்.
விதைகள் சீராகப் பரவ 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராக விதைக்க வேண்டும்.

தொழில்நுட்ப முறைகள்:

விதைத்த 15ஆம் நாள் செடிக்கு, செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு, செடிகளைக் கலைந்து விட வேண்டும். 30ஆம் நாள் செடிக்கு, செடி 30 செ.மீ. இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை கலைந்து விடவேண்டும். மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும்.

இல்லையெனில், பொதுப் பரிந்துறையான இறவை எள்ளுக்கு ஏக்கருக்கு 14:9:9 கிலோ தலை, மணி, சாம்பல் சத்து தரும் உரங்களை இடவேண்டும். விதைப்புக்குப் பின் ஓர் ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட் நூண்ணூட்டச் சத்தை, நன்கு மக்கிய 8 கிலோ தொழுவுரத்தில் கலந்து சீராக தூவ வேண்டும்.

களைகளைக் கட்டுப்படுத்த பென்டிமெத்தலின் 1.3 லிட்டர் களைக் கொல்லி மருந்தை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து, விதைத்த 3 நாள்களுக்குள் சீராகத் தெளிக்க வேண்டும். இல்லையெனில், 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.
களைக் கொல்லி பயன்படுத்தாவிட்டால் விதைத்த 15 நாள்கள் கழித்து ஒரு கைக் களையும், 35 நாள்கள் கழித்து இரண்டாவது கைக் களையும் எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

நீர்ப் பாய்ச்சுதல்:

மண்ணின் தன்மை, பருவ காலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு 5 அல்லது 6 முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். முதல் முறை விதைத்தவுடன் 7ஆவது நாள் உயிர்த் தண்ணீர், 25ஆவது நாள் பூக்கும் தருவாயில் இரண்டு முறை, காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சியடையும் போதும் இரு முறையாக 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். இறவைப் பயிரில் 65 நாள்களுக்குப் பின் நீர் பாய்ச்சக் கூடாது.

அறுவடை:

செடியில் கீழிருந்து 25 சதவீத இலைகள் உதிர்ந்து, காய்கள், தண்டு பாகங்கள் பழுப்பு நிறமாக மாறுவதே பயிர் அறுவடை செய்ய உகந்த காலமாகும். செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10ஆவது காயில் உள்ள விதைகள் கறுப்பாக மாறியவுடன் அறுவடை செய்தால், காய்கள் வெடித்துச் சிதறி ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

தினமணி செய்தி –

தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் ந. மேகநாதன்

வேளாண் அரங்கத்தில்

மிளகாய் சாகுபடி தொழில்நுட்பங்கள்

மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கியப் பயிராகும்.

ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக பரப்பளவில் மானாவாரியாக சாகுபடியாகிறது. இதில் சம்பா ரகங்களை விட மானாவாரி ரகங்களே அதிகம்.

மானாவாரி மிளகாய் சாகுபடியில் ஆரம்ப கால விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி ஆகியனவற்றில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவையும் முக்கியப் பிரச்னைகளாகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி பயிராக சுமார் 2400 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.

ரகங்களைப் பொருத்தவரை கே1,கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இதன் பருவமாகும். மண் நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இருமண்பாடு கொண்ட 6.5-7.5 வரை கார அமிலத்தன்மை உள்ள நிலம் மிளகாய்க்கு ஏற்றது.

ஏக்கருக்கு விதை அளவு 400 கிராம் போதுமானதாகும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிர் உரத்தை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து விதைத்த பின் நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் போது தூவ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் ஆகியன இட வேண்டும்.

நன்கு பொடிபட உழுது தயார் செய்யப்பட்ட நிலங்களில் புழுதியில் விதைகளை கைவிதைப்பாக வரிசையில் பருவ மழைக்கு முன்னர் விதைக்க வேண்டும். மேலும், நடவு சாகுபடி முறையில் சிபாரிசு செய்யப்படும் உர அளவில் பாதி மட்டுமே மானாவாரி மிளகாய்க்கு இட வேண்டும்.

பயிர் முளைத்து 45ஆம் நாள் களை எடுக்கும்போது மேலுரமாக 43 கிலோ யூரியா இட வேண்டும். மேலுரம் இடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும்.

பயிர் முளைத்த 30 ஆம் நாள் களை எடுக்க வேண்டும். பூக்கள் கொட்டுவதைக் குறைக்கவும், பிஞ்சுகள் உதிர்வதைத் தவிர்க்கவும், பயிர் முளைத்த 90 மற்றும் 120 ஆம் நாளில் பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி மருந்தை 4.5 லிட்டர் நீருக்கு 1. மி.லி. என்ற விகிதத்தில் கலந்து பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மேல் படும்படி தெளிக்க வேண்டும். வளர்ச்சி ஊக்க மருந்துடன் கலக்கும் நீர் உப்பு நீராக இருக்கக் கூடாது. நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்.

களை நிர்வாகத்தைப் பொருத்தவரை மிளகாய் விதை விதைத்து முதல் மழை கிடைத்தவுடன் ஹெக்டேருக்கு 1.0 லிட்டர் ப்ளுக்ளோரலின் அல்லது 3.3லிட்டர் பெண்டிமித்தலின் ஆகியனவற்றில் ஏதேனும் ஒன்றை 500 லிட்டர் நீரில் கலந்து முளைக்கும் முன் இடவேண்டிய களைக்கொல்லியாகத் தெளிக்க வேண்டும்.

பூச்சிகளின் வகைகள்

இலைப்பேன்:

இவை இலையைச் சுருட்டி சாற்றை உறிஞ்சி விடும். இவற்றை கட்டுப்படுத்த

ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 200 மி.லி. தெளிக்கலாம்.

அசுவினி:

இவை கூட்டமாக இலையின் மேல் குருத்துக்களில் பூ மொட்டுகளில் மற்றும் காய்களில் காணப்படும். அசுவினியைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசிப்பேட் 200 கிராம் அல்லது மாலத்தியான் 200 மி.லி. தெளிக்கலாம்.

காய்ப் புழு:

புரடீனியா மற்றும் பச்சைக் காய்ப் புழுக்கள் இலைகளையும், காய்களையும் தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்திட ஆமணக்குச் செடியை வரப்பு ஓரத்தில் பொறிப் பயிராக விளைவித்து புரடீனியா பூச்சியின் முட்டைக் குவியல்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

வேப்ப எண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதத்தை சோப்பு போன்ற ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவும். பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பட்சத்தில் கீழே குறிப்பிடும் ரசாயனப் பூச்சி மருந்துக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்.

மிளகாய் மொசை நோய்:

அசுவினியைக் கட்டுப்படுத்த வேண்டும். அசுவினி இலைப்பேனைக்

கட்டுப்படுத்திட மெதில் டெம்ட்டான் 25 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மூன்று முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். மகசூலைப் பொருத்தவரை 210-240 நாட்களில் ஹெக்டேருக்கு 10-15 டன் பச்சை காய்களும், 2-3 டன் காய்ந்த மிளகாய் வற்றல் மகசூலாகக் கிடைக்கும்.

அறுவடை பின்செய் நேர்த்தி முறைகள்:

மிளகாய் தோட்டத்தில் பழம் அழுகல் நோயை பூஞ்சாளக் கொல்லிகள் தெளித்து கட்டுப்படுத்திட வேண்டும். காய்கள், ஹிலியாத்திஸ் புரடீனியா புழுக்களால் தாக்கப்பட்டால் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும்.

பொட்டாஷ் உரமிடுவதால் காய்களின் நிறமும், காரத்தன்மையும் அதிகரிக்கிறது. மிளகாய் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறிக்கலாம். மிளகாய்ப் பழங்களை காம்புடன் பறிக்க வேண்டும்.

பழங்களைப் பறித்த அன்றே காயப் போட வேண்டும். மணல் பரப்பிய கலங்களில் பழங்களைப் பரப்பி உலர விட வேண்டும். மிதமான வெப்பநிலை உள்ள காலையிலும், மாலையிலும் 4 நாட்கள் உலர விட வேண்டும். நன்கு உலர்த்திய மிளகாய் வற்றலில் இருந்து காய்ப் புழு தாக்கிய மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கிய, நிறம் மாறிய சண்டு வற்றல் மேலும் உடைந்த மிளகாய் வற்றலை நீக்கி நல்ல வற்றலைப் பிரித்து எடுக்க வேண்டும்.

அறையின் ஈரம் மிளகாய் பழங்களைத் தாக்காமல் இருக்க தரையின் மேல் மணல் பரப்பி அதன் மேல் சேமிக்க வேண்டும். இரவில் மிளகாய்ப் பழங்கள் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதா போட்டு மூடி வைக்கலாம்.

நல்ல நிறத்துடன் நீர் தெளிக்கப்படாமலும் காரல் வாடை இல்லாத வற்றல் மிளகாய் நல்ல குணத்துடன் நீண்டநாள் கெடாமலும் இருக்கும்.

தினமணி செய்தி – ராமநாதபுரம் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் இளங்கோவன்