மாக்ஸ் கருவிகள்
நாற்று நடும் கருவிக்குத் தேவையான நாற்றங்கால் தட்டு
கிரீவ்ஸ் பவர் டில்லர்
—-
வழக்கம்போல – பொருட்களின் தரம் மற்றும் விலை பற்றி நாம் அறியோம்!
மண்புழு உரம்
மண்ராஜா
பொருட்களின் தரம் மற்றும் விலை பற்றி யாம் அறியோம்.
—-
வழக்கம்போல – பொருட்களின் தரம் மற்றும் விலை பற்றி நாம் அறியோம்!
பொருட்களின் தரம் மற்றும் விலை பற்றி யாம் அறியோம்.
கடந்த மூன்று நாட்களாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்ரி எக்ஸ்போ என்கிற பெயரில் விவசாய கண்காட்சி நடந்து வருகிறது. திருச்சி மற்றும் திண்டுக்கல் கண்காட்சிகளைத் தவறவிட்டதால் இதனைத் தவற விடுதல் ஆகாது என்று கடைசி நாளான இன்று சென்று வந்தேன்
ஏற்கனவே சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் என்று தமிழக அரசு அறவித்துள்ள நிலையில் இந்த கண்காட்சி முக்கியமாகப்பட்டது. விபரங்கள் அறிய வியாபாரிகள் உதவுவார்கள் அல்லவா.
துரதிர்ஷடவசமாக எதிர்பார்த்த அளவிற்கு விவசாய கடைகள் ஒதுக்கப்பட இல்லை. பெரும்பாலும் ஆரோக்கியம் என்ற தலைப்பின் கீழ் சர்க்கரை நோய்க்கான மருந்து, உணவுப்பொருட்கள் நிறைந்திருந்தன.
விவசாய அரங்குகளைப் பொருத்தமட்டில் டிராக்டர்கள், கை மற்றும் விசைத் தெளிப்பான்கள், பவர் டில்லர்கள், களை கருவிகள், நடவுஎந்திரம் மற்றும் அதற்கான தட்டுக்கள், மண்புழு மற்றும் உயிர் உரங்கள் அரங்குகளை ஆக்கிரமித்திருந்தன. சிறப்பான செய்திகள் ஏதும்சிக்கவில்லை. சில படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு.
விழுப்புரத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற விவசாயக் கண்காட்சி Agri Tec Expo 2010 பற்றி ஏற்கனவே தகவலைப் பிரசுரித்திருந்தோம். நண்பர்கள் சிலரும் ஆர்வம் தெரிவித்திருந்தார்கள்.
இன்று அந்த நிகழ்விற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தனியார் நிறுவனத்தார் ஏற்பாடு செய்த கூடல் என்பதால் பரவலாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. முழுக்க முழுக்க விவசாயக் கருவிகளில் நிறுவன வர்த்தக மேம்பாட்டிற்கு உதவுகிற செயல் என்றாலும் பல நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை ஒரே இடத்தில் சந்தித்து அவர்தம் கருவிகளைப் பார்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியதற்காக அந்த நிறுவனத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
விவசாய நவீன நுட்பம் அல்லது பயிரிடும் முறை குறித்து கருத்தரங்கம் நடந்ததாகத் தகவல் இல்லை.
கனரகக் கருவிகள்:
கருவிகள், விதைகள், புத்தகங்கள் போன்றவை எல்லாம் இருக்கும் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். பெரும்பாலும் டிராக்டர் மற்றும் பவர் டில்லர் விற்பனையாளர்கள், பம்பு செட்டு நிறுவனத்தினர் அரங்கங்களை ஆக்கிரமித்திருந்தனர். புதிய கண்டுபிடிப்புகள் பிரம்மிக்க வைத்தன. நாற்று நடும் கருவி, கலை வெட்டி அமுக்கும் கருவி போன்றவை கிட்டத்தட்ட அனைவரிடமும் இருந்தது. டிராக்டர்களிலும் புதுமை, ஸ்டைல் பற்றி முன்னிறுத்தினார்கள். டிராக்டர் மற்றும் பவர் டில்லர் பக்கம் முன்பதிவு ஓடுவதைக் காணமுடிந்தது.
வீடர் கருவிகளைப் பற்றி பதிவுகளில் எழுதியிருக்கிறோம். அவற்றின் வகைகளை நேரில் பார்க்க முடிந்தது. மஞ்சள் கரும்பு நெல் என்று பயிர்களுக்கு ஏற்றவாறு தினுசு தினுசாக இறக்கியிருந்தார்கள். சிறிய விவசாயிகளுக்குக் கைகளுக்கு எட்டாதவை. டிராக்டருடன் இணைந்த கரும்பு களை வெட்டும் கருவியைப் பற்றிய விளக்கப்படம் அறுமையானதாக இருந்தது.
இலகு ரகக் கருவிகள்:
புதிதாகக் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவருபவர்கள் அதைப் பற்றிய அசைபட (வீடியோ) விளக்கக் காட்சிகளைக் கொண்டு வருவது நல்லது. சில விற்பனையாளர்கள் செய்திருந்தனர். சிலர் செய்யவில்லை. அவர்கள் விளக்குவதைக் கேட்பதை விட படக்காட்சிகள் எளிதில் விளங்க வைத்துவிடுவதோடு, சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ள முடிகிறது. குறிப்பாக நெல்லுக்கான வீடர் கருவி, தழை அமுக்கி – மண் கிளறும் எந்திரம் – சிறிய மண் சமப்படுத்தும் இயந்திரம் என்று பல்வகைப் பயன்களைக் கொண்ட ஒரு கருவியை கும்பகோணத்திலிருந்த வந்த ஒரு நபர் வைத்திருந்தார்.
அவரே செங்கல் செய்வதற்கு ஒரு எந்திரத்தை வைத்திருந்தார்.
நடந்து கொண்டே நெற்பயிரை அறுக்கும் எந்திரம் ஒன்றை இன்னொரு நிறுவனத்தார் வைத்திருந்தனர். அதுவும் வந்தோரை கவர்ந்தது.
பாசனக் கருவிகள்
மோட்டார் பம்பு, நீர் மூழ்கி, போர்வெல் பம்பு நிறுவனத்தார் துளையிட்ட குழாய்களுடன் வருகை புரிந்திருந்தார்கள். இடத்திற்கு இடம் நகர்த்தக் கூடிய சிறிய ரக மோட்டார் கவனத்தைக் கவர்ந்தது.
சொட்டு நீர்பாசனம் பற்றிய ஸ்டால்கள் இடம் பெற்று இருந்தன. கோவை எல்ஜி நிறுவனத்தாரின் விளக்கம் சிறப்பானதாக இருந்தது.
பூச்சி மருந்து தெளிப்பான்கள்
1400 முதல் 50000 வரை கருவிகள் இங்கே வைத்திருந்தார்கள். கைத்தெளிப்பான் முதல் விசைத்தெளிப்பான்கள் வரை.
உரம்
நான் பெரிதாக எதிர்பார்த்தது இயற்கை உரங்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஏமாற்றம். தவிற எந்திரம் சம்பந்தப்பட்டது என்பதால் இயற்கை உரங்கள் தயாரிப்பு பற்றிய கூடங்கள் ஒன்று கூட இல்லை. ஓரிருவர் மட்டும் சில கூடங்களில் அமர்ந்து கல்சல்டன்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் கூடங்களிலும் இயற்கை உரங்கள் பற்றிய ஊக்குவிப்பு பிரசுரங்கள் ஏதும் காணப்படவில்லை. விவசாயிகள் மாறனும் மாறனும்னு சொல்லிட்டு இருந்திட்டு, இது பொன்ற வாய்ப்புகளை கோட்டை விட்டால் எப்படி? மற்றபடி இரசாயண உரங்கள் இருந்தன. தென்னம்பிள்ளைகளை விற்பனை செய்து கொண்டு கூடவே அதற்கான மருந்தினையும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
புத்தகங்கள்
பல்வேறு தலைப்புகளில் பல புத்தகங்கள் கொண்ட கூடம் ஒன்று இயங்கியது.
அரசு தோட்டக்கலையும் ஒரு கூடத்தை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் பெயருக்கு. ரெண்டு புடலங்காய் ரெண்டு பாவக்காய் மட்டும் நாலு பிட் நோட்டீசுகளை தகவல் பலகையில் ஒட்டிக்கொண்டு இருந்தார்கள். நீங்கள்தானே இந்தத் துறைக்கே தலைமை ஏற்கிறீர்கள். ஒரு ஆர்வமுள்ள பங்களிப்பு வேண்டாமா. நவீன விவசாயம், உரம் மற்றும் மண் மேலாண்மை என்று எத்தணையோ விசியங்கள் இருக்கும்போது, வியாபாரம் விடுத்து நீங்களாவது விவசாயிகளுக்கு விபரம் தந்திருக்கலாம் அல்லவா.
எதிர்பார்த்த அளவு விபரம் தராவிட்டாலும் (அல்லது நாம் சேகரிக்காவிட்டாலும்) விழுப்புரம் மற்றும் சுத்துபத்து கிராம விவசாயிகளுக்கு இது ஒரு நல்ல நிகழ்வு. இது போன்ற நிகழ்வுகள் இன்னும் மேம்படுத்தப்பட்டு அனைத்து நகரங்களிலும் அடிக்கடி நடக்க வேண்டும்.
செம்மை நெல் சாகுபடி மேற்கொண்டால் இரண்டு மடங்கு பலன் பெறலாம் என்றார் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. திரவியம்.
கரூர் மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலமாக கரூரில் வேளாண் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் செவ்வாய்கிழமை தொடங்கியது.
புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் புழுதேரி வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை) தே. தனசேகர் வாழைசாகுபடி குறித்து பேசியது:
வாழை சாகுபடி செய்யப்படும் பரப்பளவிலும், உற்பத்தியிலும் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எனினும், ஏற்றுமதி வாய்ப்புகள் இங்கு இல்லை. வாழைப்பழம் 20 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவைகள் பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. 350 மெட்ரிக் டன் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
எனினும், வாழைப்பழத்துக்கு வெளிநாடுகளில் அதிக அளவில் தேவை உள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் அதிக தொலைவும், உற்பத்திக்கான செலவும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் வாழைப்பழம் உற்பத்தி செய்ய ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை செலவாகிறது. வெளிநாடுகளில் கிலோவுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகிறது.
இந்தியாவில் இச் செலவினைக் குறைக்க தற்போது அடர்நடவு முறை என்ற புதிய நடவு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால், 35 சத கன்றுகள் கூடுதலாகப் பயிரிடப்படுகிறது. இந்த முறையால் 20 சத உற்பத்தி அதிகரிப்பதோடு, 20 சத செலவினங்களும் குறையும். இந்த முறையை குளித்தலை, லாலாப்பேட்டை வட்டாரங்களில் செயல்படுத்தி வருகிறோம் என்றார்.
முன்னதாக, செம்மை நெல் சாகுபடி குறித்து வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. திரவியம் பேசியது:
செம்மைநெல் சாகுபடி முறையானது 1983 -ல் கிழக்கு மடஸ்காரில் லனானி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு இம்முறை அறிமுகமானது. இம்முறையில் ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ விதை போதுமானது. பழைய முறையில் 20 முதல் 30 கிலோ வரை தேவைப்பட்டது. மேலும், இயற்கை, இயற்கை உரங்களை பயன்படுத்தினால் அதிக அளவில் சாகுபடி பெறலாம். இதற்காக 6 வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.
நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்து நாற்றங்காலில் நடவு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக நிலத்தை நன்றாக உழவு செய்து சுமார் 5 டன் எரு போன்ற உரங்களை தளைச்சத்தாக இட வேண்டும். ஒரு மாதமான நாற்றுகளை பறித்து இடைவெளி விட்டு நட வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் விட வேண்டும். கோனோவீடரை பயன்படுத்தி களைகளை எடுப்பத்தால் பயிர்களுக்கிடைய இடைவெளி ஏற்பட்டு காற்றோட்டத்தையும், வேர் விடுவதற்கான சூழலையும் ஏற்படுத்தும்.
பூச்சித்தாக்குதல் குறைவதோடு, வைக்கோலும் அதிகமாகக் கிடைக்கும். இந்த முறையை விளக்க கரூர் மாவட்டத்தில் நெய்தலூர், நச்சலூர், முதலைப்பட்டி, ஒந்தாம்பட்டி ஆகிய கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இயற்கை உரங்களை பயன்படுத்தி செம்மை நெல் சாகுபடி செய்யும் பொழுது இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் மரவள்ளி சாகுபடி குறித்து வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சு. ஈஸ்வரன், கறவைமாடு வளர்ப்பு மற்றும் தீவனப்புல் வளர்ப்பினை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்சி மைய தலைவர் க. செந்தில்வேல், நவீன வேளாண்மையில் பண்ணைக் கருவிகள் குறித்து உழவியல் பேராசிரியர் ச. பன்னீர்செல்வம், உள்நாட்டு மீன் வளர்ப்பு குறித்து மீன் துறை ஆய்வாளர் வ. அப்துல்காதர் ஜெய்லானி, பட்டு வளர்ப்பு குறித்து பட்டுவளர்ச் சித்துறை உதவி இயக்குநர் சு. கோலாசுவாமி, உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து
வேளாண் துணை இயக்குநர் சு. ஷோபா, வனப் பாதுகாப்பு குறித்து வனச்சரகர் அ. நாகராஜன் ஆகியோர் பேசினர்.
தினமணி தகவல் –
திரு. ஜெ. திரவியம், வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர், கரூர்
திரு. தே. தனசேகர், தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை), புழுதேரி வேளாண் அறிவியல் மையம்
விதை உற்பத்தியில் தன்னிறைவு காணவும் அதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் விதை கிராமத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் மான்ய விலையில் சான்று விதைகள் விநியோகம், விதை உற்பத்திக்கான விவசாயிகள் பயிற்சி, மானிய விலையில் சேமிப்புக் கொள்கலன் விநியோகம் ஆகிய திட்டங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் 11 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன.
சான்று விதை விநியோகம் விவசாயத்தில் கூடுதல் மகசூல் பெற பயிர் எண்ணிக்கை பராமரிப்பு அவசியம். இதற்கு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துல் முக்கியம். விவசாயிகளோ பொருளாதார நெருக்கடியால் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதைக்க சிரமப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு விதைக் கிராமம் மூலம் நெல், சிறுதானியம், பயறு சான்று விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விதை உற்பத்தி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு விவசாயிகளின் வயல்களிலேயே தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேளாண் துறை உதவுகிறது.
உற்பத்தி செய்யப்படும் விதைகளில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு கிராமத்திலுள்ள இதர விவசாயிகளுக்கும் விற்பனை செய்து அதன் மூலம் கிராமம் முழுவதும் தரமான விதைகள் பயன்படுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது.
விதை உற்பத்தி பயிற்சி:
விதை கிராமத் திட்டத்தை செயல்படுத்த கிராமங்களைத் தேர்வு செய்து அக்கிராமத்தில் உள்ள 50 விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி வழங்குவதுடன் விதை சான்றளிப்புத் துறை வல்லுநர்களாலும் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 3 கட்டமாக வழங்கப்படுகிறது.
விதைசேமிப்பு கொள்கலன் விநியோகம்:
எலி மற்றும் பூச்சிகளால் தானியங்கள் சேதாரமாகாமல் இருக்கவும் அதன் தரம் கெடாமல் இருக்கவும் விதைகளை சேமித்து வைத்துக் கொள்ள விதை கொள்கலன்கள் இந்தத் திட்டம் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ந.சத்தியமூர்த்தி கூறியது:
விவசாயிகளுக்கு இத்திட்டம் ஒரு சிறந்த வரப்பிரசாதம். விதை உற்பத்திப் பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்குவதால் விதைத் தேர்வு, ரகத்தேர்வு, உரமிடுதல், பயிர் எண்ணிக்கை பராமரிப்பு சம்பந்தமான முதற்கட்ட பயிற்சியின் போது வழங்குகிறோம்.
பூச்சி, நோய்க் கட்டுப்பாடு, நீர் நிர்வாகம், களையெடுப்பு, கலவன் நீக்குதல் மற்றும் அறுவடை தொடர்பான பயிற்சியினை 2 வது கட்டமாகவும் தரமான விதைகளை பிரித்தெடுத்தல், விதை முளைப்புத்திறன் மற்றும் இனத்தூய்மை கண்டறிதல், விதை சேமிப்பு ஆகியவற்றை 3-வது கட்ட பயிற்சியிலும் வழங்குகிறோம்.
இந்தப் பயிற்சிகள் அனைத்தையும் மாவட்ட வேளாண் துறை சார்பில் அந்தந்த கிராமங்களிலேயே பயிற்சியை நடத்துவதால் விவசாயிகள் வயல்களில் நேரடியாகவே பயிற்சி பெறுகின்றனர்.
எனவே விவசாயிகள் விதை கிராமத் திட்டத்தில் மானிய விலையில் விதைகள் மற்றும் விதை சேமிப்புக் கொள்கலன்கள் வாங்கிப் பயன்பெறுவதோடு கிராம அளவிலான விதை உற்பத்திப் பயிற்சியிலும் கலந்து கொள்கின்றனர் என்றார்.
தினமணி தகவல் – சி.வ.சு.ஜெகஜோதி, இராமநாதபுரம் மற்றும் திரு ந.சத்தியமூர்த்தி, மாவட்ட வேளாண் இணை இயக்குநர், இராமநாதபுரம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வி.வி.ஏ. ஆறுமுகம் மகாலில் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை விவசாய பொருள்காட்சி நடைபெறுகிறது. இதை மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
இந்த கண்காட்சியை சென்னை டிரேட் ஈவண்ட்ஸ் நிறுவனம் நடத்துகிறது. இதுகுறித்து அந்நிறுவன வணிக இயக்குநர் இரா. இளங்கோ நிருபர்களிடம் கூறியது:
இந்த பொருள்காட்சியில் விவசாயத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை அறிவியல் நிலையம், தென்னிந்திய காட்டன் மில்ஸ் சங்கம், ரோவர்ஸ் விவசாயக் கல்லூரி, பெங்களூர் காபி கழகம், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ், இந்தியன் பொட்டாஷியம் நிறுவனம் ஆகிய துறைகள் கலந்து கொள்கின்றன.
பொருள்காட்சியில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, விவசாய உபகரணங்கள், விவசாய தொழில்நுட்பம், டிராக்டர்கள், நுண்ணிய உயிர் உயர் விளைச்சல் தொழில்நுட்பம், பம்ப்புகள், சொட்டு நீர்ப் பாசனம், செடிகள், விதைகள், தென்னங்கன்றுகள், விவசாயப் புத்தகங்கள் மற்றும் பல அறிய கண்டுபிடிப்புகளும் இடம்பெறுகின்றன.
இந்த பொருள்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும். எந்த நிலத்தில் என்ன பயிர் செய்யலாம் என்பதற்கு சரியான தீர்வு கிடைக்க இந்த பொருள்காட்சி வழிகாட்டியாக இருக்கும்.
மேலும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் ஒரே இடத்தில் வாங்க, உற்பத்தியாளர்களிடம் நேரடித் தொடர்புக்கு ஒரு பாலமாக இருக்கும். மேலும் இந்த பொருள்காட்சியை பார்வையிட இலங்கை மற்றும் சீனாவிலிருந்து விவசாயக் குழுவினர் வருகை தர உள்ளனர். இதன் மூலம் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன என்று தெரிவித்தார்.