உழவர்களுக்கு இளநிலைப் பட்டம் (பி.எப்.டெக்)., படிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உழவர்களுக்கென்று முதன் முதலாக துவங்கிஉள்ளது. உலகிலேயே இது ஒரு முன்னோடி திட்டம். பல்கலைக் கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், கோயம்புத்தூர்-641 003 மூலம் இந்த ஆண்டு அறிமுகப் படுத்தியுள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
- இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப பட்டப்படிப்பின் வழியாக உழவர்கள் சுயதொழில் முனைவராகலாம்.
- அனுபவம் வாய்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படும்.
- நிலத்தினை பண்படுத்துதல் முதல் அறுவடை வரையும் தானியங்களை சேமித்தல், பதப்படுத்துதல் மற்றும் மதிப்பூட்டுதல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்ளலாம்.
- தொழில்நுட்பங்களுக்கான செயல்முறை விளக்கங்கள் நேர்முகப் பயிற்சி வழியாக எளிய முறையில் நடத்தப்பட உள்ளது.
- இப்பட்டப்படிப்பு எளியமுறையில் தமிழில் பயிற்றுவிக்கப்பட உள்ளது.
- பருவமுறையில் (செமஸ்டர் சிஸ்டம்) 3 ஆண்டுகளுக்கு 6 பருவங்களில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
தகுதிகள்:
உலகிலேயே முதன்முறையாக வேளாண் மக்களுக்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 10ம் வகுப்பு படித்த 30 வயது நிரம்பிய அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம். உழவர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வேளாண்மை மற்றும் அறிவியல் அடிப்படையில் இப்பட்டப்படிப்பின்மூலம் அறிந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு
இயக்குநர்,
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003.
0422-661 1229, 94421 11047, 94421 11048,
மின்அ ஞ்சல்: odl@tnau.ac.in
இணையதளம்: www.tnau.ac.in.
தினமலர் தகவல் முனைவர் கு.சௌந்தரபாண்டியன்.